குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாம் 

மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூரில் செய்யூர் வட்ட வழங்கல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூரில் செய்யூர் வட்ட வழங்கல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்த முகாமில், பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் பிழை திருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம், செல்லிடப்பேசி எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. முகாமுக்கு, செய்யூர் வட்டாட்சியர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி, வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமை வகித்தார். வட்டப் பொறியாளர் பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 இதில், மொத்தம் 38 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யூர் வட்ட வழங்கல் துறையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com