வருமான வரி குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாம்பரம் வருமானவரி அலுவலகம் (கார்ப்பரேட் அல்லாத பிரிவு) சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வருமான வரித்துறை உதவி ஆணையர் ஜி.சிவய்யா தலைமை வகித்தார். வருமான வரி அதிகாரிகள் எம்.பி.சீனிவாசன், எஸ்.ராமஸ்வாமி, சி.எஸ்.சரவணன், ஸ்ரீவித்யா நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, வியாபாரிகள் வருமானவரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.
இதையடுத்து, காணொலிக் காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வருமானவரி குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.
இக்கூட்டத்தில், தொழிலதிபர்கள், மளிகை, ஜவுளி மற்றும் நகை வியாபாரிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், தொழில் முனைவோர், வழக்குரைஞர்கள், ஆடிட்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.