பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை

பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.


பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிகரை பகுதியில் சர்வதேசப் பள்ளியில் காஞ்சிபுரம் தீயணைப்பு மாவட்ட அலுவலர் முரளி தலைமையில்  பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், விபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், தீத்தடுப்பு விழிப்புணர்வு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி நிர்வாகிகள் கல்யாண், காமேஸ்வர ராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு வகையான தீ விபத்துகள், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட தீயணைப்பு துணை அலுவலர் அப்துல் பாரிக், நிலைய அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com