வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

சோமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்லிடப்பேசிகளை வழிப்பறி செய்து வந்த இருவரை சோமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.


சோமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்லிடப்பேசிகளை வழிப்பறி செய்து வந்த இருவரை சோமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
சோமங்கலம் போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச்சாலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீஸாரைக் கண்டதும்  தப்பியோட முயற்சித்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ரபீக் (29), குரோம்பேட்டையைச் சேர்ந்த சேகர் (29) என்பதும், இவர்கள் இருவரும் வண்டலூர்- வெளிவட்டச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் செல்லிடப்பேசிகளை வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த சோமங்கலம் போலீஸார் அவர்களிடம் இருந்து 3 செல்லிடப்பேசிகளை  பறிமுதல்  செய்தனர். இருவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com