சிங்கப்பெருமாள்கோவிலில் இரண்டு இருசக்கர வானங்கள் மோதிக் கொண்டதில் புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.
வண்டலூரை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் பாலாஜி விஸ்வநாத் (23). தனியார் நிறுவன ஊழியரான அவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அவர் சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து கீழக்கரணை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், பாலாஜி விஸ்வநாத்தின் வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.