செங்கல்பட்டு - பரனூர் இடையே ரயிலில் அடிபட்டு பெண் ஒருவர் இறந்தார்.
கொளவாய் ஏரி அருகில் திங்கள்கிழமை இரவு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடந்தார். அப்போது சென்னையில் இருந்து செங்கல்பட்டிற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் அடிபட்டு அவர் இறந்தார். தகவலறிந்து சென்ற ரயில்வே போலீஸார் அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.