வாக்காளர் அட்டை பெறாதோர் ரூ.25 செலுத்தி பெறலாம்: ஆட்சியர் தகவல்

வாக்காளர் அடையாள அட்டை பெறாதோர் ரூ.25 செலுத்தி, வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார். 


வாக்காளர் அடையாள அட்டை பெறாதோர் ரூ.25 செலுத்தி, வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார். 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் 4 ஆயிரத்து 743 வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தில் இருந்து இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிய வந்தது. 
அதுபோல், கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் மேம்படுத்தும் பணிகளின்போது, 4,547 வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டைகளை பெறவில்லை. 
அதன்படி, இதுவரை தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறாதோர் உரிய இ-சேவை மையத்தை அணுகி, ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com