நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தனியார் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பென்னலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், புதன்கிழமை நூறு சதவீத வாக்குப் பதிவு என்ற கருத்தை வலியுறுத்தி மாணவர்கள் நின்று, மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், பணம், பொருள்களை வாங்கிக்கொண்டு வாக்களிக்க மாட்டோம் என மாணவர்கள் தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் வசுமதி, மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுசுயா, பிரபாகர், வட்டார ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், ஊழியர்கள், சித்தன், நீலகண்டன், ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.