தேர்தல் விழிப்புணர்வு: பள்ளி மாணவர்களுக்குப் பரிசு

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூர் மானாம்பதி-பெருநகர் பகுதியில் தனியார் பள்ளியொன்றில் தேர்தல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சார்-ஆட்சியர் சரவணன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் 1,070 மாணவ, மாணவியர் ஒருங்கிணைந்து 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் பிரம்மாண்டமாக 100% என்ற வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, நெகிழிப் பைகளுக்கு மாற்றாக 2 ஆயிரம் துணிப்பைகளைக் கொண்டு விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதையடுத்து, ஒரு நிமிடத்தில் 5 மாணவியர் 40 திருக்குறள் ஒப்பித்தல், யோகாவில் 500 மாணவர்கள் பின்புறமாக வளைந்து வணக்கம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com