முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
அரசுப் பேருந்து மோதி மினி வேன் ஓட்டுநர் சாவு
By DIN | Published On : 15th May 2019 04:06 AM | Last Updated : 15th May 2019 04:06 AM | அ+அ அ- |

தனியார் மினி வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநர் இறந்தார்.
சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (55), அதே பகுதியைச் சேர்ந்த கிளீனர் மணிகண்டன் (38) ஆகியோர் சேலத்தில் இருந்து சென்னைக்கு மினி வேனில் சரக்கு ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனர். செங்கல்பட்டை அடுத்து பழவேலி தேசிய நெடுஞ்சாலை அருகில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து, அவர்களின் மினி வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் ஓட்டுநர் குணசேகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கிளீனர் மணிகண்டன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.