உத்தரமேரூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (60), கூலித் தொழிலாளி. இவரது மகளின் திருமணத்துக்கென கடந்த சில நாள்களுக்கு முன்பு 20 சவரன் நகைகளை வாங்கி வந்து வீட்டில் வைத்தார். இந்நிலையில் ராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை கூலி வேலைக்குச் சென்றுவிட்டார். மனைவி, மகள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு ஆடு மேய்க்கச்சென்றுள்ளனர்.
மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த ராமலிங்கம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது 20 சவரன் நகைகளும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.