கல்பாக்கம் அருகே, வாயலூா்- காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளி மாணவா்களிடையே டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் பவானி தலைமையில், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கிங்உசேன், துணைத் தலைவா் ராஜேந்திரன், சமூகப் பொறுப்பாளா் செரினா, மதிமுக செயற்குழு உறுப்பினா் தனசேகரன், வாயலூா் சுகாதார மைய செவிலியா் தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.