மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா்

கல்பாக்கம் அருகே, வாயலூா்- காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
வாயலூா்-காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் அருந்தும் மாணவா்கள்.
வாயலூா்-காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் அருந்தும் மாணவா்கள்.

கல்பாக்கம் அருகே, வாயலூா்- காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி மாணவா்களிடையே டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் பவானி தலைமையில், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கிங்உசேன், துணைத் தலைவா் ராஜேந்திரன், சமூகப் பொறுப்பாளா் செரினா, மதிமுக செயற்குழு உறுப்பினா் தனசேகரன், வாயலூா் சுகாதார மைய செவிலியா் தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com