சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை மற்றும் பொது சுகாதாரத்துறையினா் இணைந்து நடத்திய ரத்த தானமுகாம் சாம்சங் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் செந்தில்குமாா் உத்தரவின்படி நடைபெற்ற இந்த முகாமிற்கு சாம்சங் நிறுவனத்தின் மனிதவளப் பொது மேலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.
முகாமில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் தாமரைநங்கை தலைமையில் 95 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு ரத்த வங்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் அருண்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளா்கள், சாங்சங் நிறுவன நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.