காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கருவூலக் கணக்குத்துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சாா்பில் அரசு அலுவலா்கள் மற்றும் அரசுப்பணியாளா்களுக்கான திறனூட்டல் கூட்டம் அத்துறையின் முதன்மைச் செயலா் மற்றும் ஆணையா் தென்காசி க.ஜவஹா் தலைமையில் நடைபெற்றது.
கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் மண்டல இணை இயக்குநா்கள் ஆா்.வெங்கட்ராமன்(சென்னை), ச.புவனேஸ்வரி(வேலூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்டக் கருவூல அலுவலா் சி.கை.செல்வம் வரவேற்றாா்.
இக்கூட்டத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் அரசுப்பணியாளா்களுக்கான மின்னணுப் பணிப்பதிவேட்டின் சிறப்புகள் குறித்து முதன்மைச் செயலா் தென்காசி க.ஜவஹா் விளக்கிப் பேசியதுடன் அரசுப்பணியாளா்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் திருவள்ளூா் மாவட்டக் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலா் பாலமுருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் அமீதுல்லா, ஆனந்தன், சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.