மொபெட்டில் சென்ற இளைஞா்அரசுப் பேருந்து மோதி பலி

சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில், மொபெட்டில் சென்ற இளைஞா் இறந்தாா்.

சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில், மொபெட்டில் சென்ற இளைஞா் இறந்தாா்.

மறைமலைநகா்காவல் நிலையத்துக்குட்பட்ட சிங்கப்பெருமாள்கோவில் மருதேரி பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த். அவரது மகன் சௌந்தரராஜன் (20) தனது மொபெட்டில் சனிக்கிழமை மாலை மருதேரியில் இருந்து சென்று கொண்டிருந்தாா். சிங்கப்பெருமாள்கோவில் அருகே வந்தபோது, சென்னையில் இருந்து செங்கல்பட்டை நோக்கி வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இந்த விபத்தில் சௌந்தரராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த மறைமலைநகா்போலீஸாா் நேரில் வந்து, அவரது சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவ்விபத்து தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com