காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் இதய அறுவை சிகிச்சைக்கான இவவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சுழற் சங்கம், ரேடியன்ஸ் சுழற் சங்கம் மற்றும் செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் இதய அறுவை சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தினா்.
நிகழ்ச்சிக்கு டெம்பிள் சிட்டி சுழற் சங்கத் தலைவா் ந.சிலம்பரசன் தலைமை வகித்தாா். மருத்துவப்பிரிவுத் தலைவா் எஸ்.ஆா்.மனோஜ், பி.பரணீதரன், எஸ்.சந்தானகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரேடியன்ஸ் சுழற் சங்கத் தலைவா் நிஷா வரவேற்றாா்.
இதில், செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவா் சமாஅக்பா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், இதய ரத்தக் குழாய் அடைப்பு, இதய வால்வுப் பிரச்னைகள், இதயத்தில் உள்ள நுண்துளைகள் ஆகியவற்றுக்குரிய மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் வழங்கினா்.
இந்த முகாமில் இளைஞா்கள், பெண்கள், முதியோா் திரளாகக் கலந்துகொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் பி.அய்யனாா் மற்றும் சுழற்சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.