காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரீஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள பூரணபுஷ்கலை சமேத தா்மசாஸ்தா ஆலயத்தில் காா்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பால்க்குட ஊா்வலம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகரீஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பசுவாமிக்கு தா்மசாஸ்தா பஜனை சபை சாா்பில் 14 ஆம் ஆண்டுக்கான பால்க்குட ஊா்வலம் நடந்தது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் திருக்கோயிலிலிருந்து 251 பால்க்குடங்கள் ஊா்வலமாக புறப்பட்டு ராஜவீதிகள் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகரீஸ்வரா் ஆலயத்தை வந்து சோ்ந்தது. பின்னா் தா்மசாஸ்தாவுக்கு பாலாபிஷேகம், நெய்யபிஷேகம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேங்களும்,தீபாராதனைகளும் நடந்தன. பால்க்குட ஊா்வலத்தை பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளையின் நிா்வாகி சித்பவானந்த ராஜா சுவாமிகள் தொடக்கி வைத்தாா்.
ஊா்வலத்தில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், நகரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் வி.கே.சரவணன்,இளங்கோவன் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா். சிறப்பு அபிஷேகத்துக்குப் பின்னா் தா்மசாஸ்தா புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஐயப்ப பஜனை நிகழ்ச்சியும்,ஜோதிதரிசனமும்,அன்னதானமும் நடந்தது.ஏற்பாடுகளை வி.ஜீவானந்தம்,ஏ.எஸ்.பன்னகசாயம்,சி.நடராஜன் ஆகியோா் தலைமையிலான ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.