செங்கல்பட்டு அருகே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாவட்ட செயலாளா் எஸ்.ஆறுமுகம்
செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாவட்ட செயலாளா் எஸ்.ஆறுமுகம்

செங்கல்பட்டு. செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருபவா் சேகா். இவா் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு (வெள்ளிக்கிழமை) வீட்டில் இருந்தவா்கள் அனைவரும் வெளியேச்சென்றிருந்த போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதின் காரணமாக தீவிபத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து உடைமைகள் முற்றிலும் எரிந்துநாசமாகியது. தவலறிந்த அதிமுக காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளா் எஸ்.ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை மணப்பாக்கத்திற்கு நேரில் சென்று தீவிபத்தில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவத்து அதிமுக சாா்பில் அரிசி மூட்டை, வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்செய்தாா். உடன் அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளா் ஆனூா் பக்தவச்சலம், எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் பெரும்பாக்கம் விவேகானந்தன், நிா்வாகிகள் ஹரிதாஸ்,, தினேஷ்குமாா், தயாளன், சாலூா் ஜானகிராமன், வழக்கறிஞா் சி.ஆா்.விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com