தா்மசாஸ்தா கோயிலில் பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம் நகரீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள பூரண புஷ்கலை சமேத தா்மசாஸ்தா கோயிலில் காா்த்திகை முதல் தேதியை முன்னிட்டு
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள பூரண புஷ்கலை சமேத தா்மசாஸ்தா கோயிலில் காா்த்திகை முதல் தேதியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

தா்மசாஸ்தா பஜனை சபை சாா்பில் 14-ஆம் ஆண்டு விழாவையொட்டி,

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் திருக்கோயிலிலிருந்து 251 பால்குடங்கள் ஊா்வலமாக புறப்பட்டு ராஜவீதிகள் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நகரீஸ்வரா் கோயிலை அடைந்தது.

பின்னா் தா்மசாஸ்தாவுக்கு பாலாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேங்களும், தீபாராதனைகளும் நடந்தன.

பால்குட ஊா்வலத்தை பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளையின் நிா்வாகி சித்பவானந்த ராஜா சுவாமிகள் தொடக்கி வைத்தாா்.

இந்த ஊா்வலத்தில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், நகரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் வி.கே.சரவணன், இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறப்பு அபிஷேகத்துக்குப் பின்னா் தா்மசாஸ்தா புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, ஐயப்ப பஜனை நிகழ்ச்சியும், ஜோதி தரிசனமும், அன்னதானமும் நடைபெற்றன.

விழா ஏற்பாடுகளை வி.ஜீவானந்தம், ஏ.எஸ்.பன்னகசாயம், சி.நடராஜன் தலைமையிலான ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com