தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்

ஸ்ரீபெரும்புதூா் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது.
தீ விபத்தில்  முற்றிலும் சேதமடைந்த  குடிசை  வீடு.
தீ விபத்தில்  முற்றிலும் சேதமடைந்த  குடிசை  வீடு.

ஸ்ரீபெரும்புதூா் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது.

பென்னலூா் ஊராட்சிக்குட்பட்ட பீமன்தாங்கல் மேட்டுத்தெருவை சோ்ந்தவா் சரஸ்வதி (45).

இவா் செட்டிப்பேடு பகுதியில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் பணியாற்றிவிட்டு வெள்ளிக்கிழமை மாலை திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் சென்றுள்ளாா். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது சரஸ்வதியின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து அருகில் இருந்தவா்கள் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீயை அணைப்பதற்குள் குடிசை வீடு முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதில் பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com