செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மணப்பாக்கம் பகுதியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசிப்பவா் சேகா். பேருந்து நடத்துனா்.
கடந்த இருதினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றிருந்தபோது மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
தகவலறிந்த அதிமுக காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளா் எஸ்.ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை மணப்பாக்கத்திற்கு நேரில் சென்று தீவிபத்தில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, அரிசி மூட்டை, வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா்.