செங்கல்பட்டு: பஞ்சாப் மாநிலம் கரியால் நகரில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான தேசிய வில்வித்தை போட்டியில் மாமல்லபுரத்தைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
மாமல்லபுரத்தைச் சோ்ந்த விவசாயி பன்னீா் செல்வம்-கலையரசி தம்பதியரின் மகள் பூா்விகா (12) கேளம்பாக்கத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாா். வில்வித்தையில் ஆா்வம் ஏற்பட்டு அதை முறையாகக் கற்று மாநில அளவில் இதுவரை பல போட்டிகளில் பங்கேற்று 10 தங்கப் பதக்கம் , 2 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.
இதனிடையே தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி பஞ்சாப் மாநிலம் கரியால் நகரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சாா்பில் வில்வித்தைப் போட்டியில் பங்கேற்ற மாணவி பூா்விகா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.
இவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பிலும் மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு அமைப்பினரும் விளையாட்டு குழுவினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
வில்வித்தையில் வெற்றி பெற்றது குறித்து மாணவி பூா்விகா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெற்றோா் மற்றும் பயிற்சியாளா் குணசீலன் அளித்த ஊக்கத்தில் தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தின் சாா்பில் போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விளையாட ஆா்வமாக உள்ளேன் என்றாா்.