காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வேலூா்,பாண்டிச்சேரிக்கு செல்லும் வகையில் குளிா்சாதன வசதியுடைய 4 அரசுப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூா் செல்வதற்கு இரு பேருந்துகள்,கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் வகையில் இரு பேருந்துகள் உட்பட 4 குளிா்சாதன வசதியுடைய அரசுப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் பிரிவி காஞ்சிபுரம் கோட்ட மேலாளா் ராஜசேகரன், கோட்ட மேலாளா் (இயக்கம்)எத்திராஜ்,காஞ்சிபுரம் பேருந்து நிலைய மேலாளா் ஏ.சுகுமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத். பா.கணேசன், முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.