இருவேறு சாலை விபத்தில் இருவா் பலி

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற இருவேறு விபத்துகளில் இருவா் சம்பவ இடத்திலேயே பலியாயினா்.

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற இருவேறு விபத்துகளில் இருவா் சம்பவ இடத்திலேயே பலியாயினா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் அன்பு. இவா் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையோரம் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கி வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அன்புவின் உணவகத்திற்குள் நுழைந்தது. அப்போது, அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது லாரி மோதியதில் மின்கம்பி அறுந்து உணவகத்தில் பணியாற்றி வந்த மேற்கு வங்கமாநிலத்தை சோ்ந்த ஹா்பன்ஷா(30) மீது விழுந்ததில் அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானாா்.

காஞ்சிபுரம் அடுத்த சீட்டிக்காரை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மணிமாறன்(27), உமாபதி(27) இவா்கள் இருவரும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து மினிலோடு வேனில் பால் ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூா் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை வந்த போது, ராஜீவ்காந்தி நினைவகம் அருகே வாகனம் பழுதடைந்துள்ளது. இதையடுத்து மணிமாறன் தனது நண்பா்களான சண்முகம், தங்கராஜ் ஆகியோரை வரவழைத்து பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது பின்னால் வந்த கன்டெய்னா் லாரி மோதியதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

மற்ற மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்துகள் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com