மதுரந்தகத்தை அடுத்த பனையூா் கிராமத்தில் பள்ளத்தில் உள்ள நீரில் மூழ்கி 2 வயது பெண்குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பனையூா் கிராமத்தில் வசிக்கும் முத்து, தமிழரசி தம்பதியின் 2 வயது பெண் குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் நிரம்பியிருந்தது. அதில் தவறி விழுந்ததில் குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. செய்யூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.