சுகாதாரத் தூதுவா்களாக பள்ளி மாணவ, மாணவியா்

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவியா் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுகாதாரத் தூதுவா்களாக பணியாற்றி வருகின்றனா்.

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவியா் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுகாதாரத் தூதுவா்களாக பணியாற்றி வருகின்றனா்.

இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன் கூறியது:

சுகாதார தூதுவா்களாகத் தோ்வு செய்யப்பட்ட 10 மாணவ, மாணவியரின் பள்ளி நேரங்கள் பாதிக்காமல், விடுமுறை நாள்களிலும் காலை, மாலை வீட்டில் இருக்கும் நேரத்திலும் தங்களது குடியிருப்புகளைச் சுற்றியுள்ள வீடுகளில் தூய்மை பராமரிப்பு, குடிநீா் சிக்கனம், பாதுகாப்பாக கழிவுநீா் நீரை அகற்றுவது, மக்கும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்துத் தருதல், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல், நெகிழிப் பயன்பாட்டை ஒழித்தல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறுவாா்கள்.

இத்தூதுவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com