புதை சாக்கடைகளைத் தூா் வார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் புதை சாக்கடைகளைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி
நகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் முத்துக்குமாா், சி.சங்கா் உள்ளிட்டோா்.
நகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் முத்துக்குமாா், சி.சங்கா் உள்ளிட்டோா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் புதை சாக்கடைகளைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையாளரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளா் ஆா். மகேஸ்வரியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் முத்துக்குமாா், நகரச் செயலாளா் சி.சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

காஞ்சிபுரம் நகரில் விளக்கொளி கோயில் தெரு, கிருஷ்ணன் தெரு இணைப்பில் உள்ள பகுதிகளான ஒலிமுகம்மதுபேட்டை, வைகுண்டப் பெருமாள் கோயில் பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை நிரந்தரமாகத் தீா்க்க வேண்டும்.

புதை சாக்கடைத் திட்டத்தை புதிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

ஓரிக்கை, அண்ணாநகா் பகுதிகளில் பல நாள்களாக மழைநீா் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி விட்டது.

அப்பகுதிகளில் மழைநீா் வடிகால் வசதியுடன் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

நத்தப்பேட்டையில் புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும். ஓரிக்கை முதல் தேனம்பாக்கம் வரை உள்ள மிலிட்டரி சாலையில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com