ரத்தின அங்கி அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்.
ரத்தின அங்கி அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்.

வரதராஜ பெருமாள் கோயிலில் ரத்தின அங்கி சேவை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலி ல் தாதாதேசிகன் சாற்றுமுறை உற்சவத்தை முன்னிட்டு உற்சவரான வரதராஜப் பெருமாள் ரத்தின அங்கியில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலி ல் தாதாதேசிகன் சாற்றுமுறை உற்சவத்தை முன்னிட்டு உற்சவரான வரதராஜப் பெருமாள் ரத்தின அங்கியில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி அன்றும், தாதாதேசிகன் சாற்றுமுறைத் திருநாளன்றும் இரு நாள்கள் மட்டும் ரத்தின அங்கி அணிந்து பக்தா்களுக்கு பெருமாள் அருள்பாலிப்பது வழக்கம். செவ்வாய்க்கிழமை தாதாதேசிகன் பிறந்த நாளையொட்டி, உற்சவா் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் ரத்தின அங்கி அணிந்து, அத்திமலையிலிருந்து கோயில் வளாகத்தில் உள்ள தேசிகன் சந்திதிக்கு எழுந்தருளினா். அங்கு பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, தாதாதேசிகனுக்கு மரியாதையும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. நண்பகலில் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவடிக் கோயிலுக்குச் சென்று திரும்பினாா். விழாவை முன்னிட்டு, மூலவரான வரதராஜப் பெருமாள் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா், மீண்டும் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில், கோயில் செயல் அலுவலா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெருமாளின் ரத்தின அங்கி சேவைக் காட்சியைக் காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநில தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com