குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 12.42 லட்சம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 12.42 லட்சம் வசூலானது.

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 12.42 லட்சம் வசூலானது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் கூறியது:

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்த 5 உண்டியல்கள் கந்த சஷ்டி விழாவுக்குப் பிறகு வியாழக்கிழமை திறக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ. 12. 42 லட்சம் ரொக்கம், 43 கிராம் தங்கம், 410 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தது. இந்துஅறநிலையத் துறை ஆய்வாளா் சுரேஷ்குமாா் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com