ராமலிங்கேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி அம்மன் சமேத ராமலிங்கேசுவரர் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி அம்மன் சமேத ராமலிங்கேசுவரர் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இக்கோயிலில், பர்வதவர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து அம்மன் கோயில் உள் வளாகத்தில் வலம் வந்து நவராத்திரி மண்டபத்தை அடைந்தார். பின்னர், அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
 விழாவில், திம்மராஜம்பேட்டை, அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com