எஸ்.ஆர்.எம். கலை-அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 தமிழக அரசு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி உரையாற்றினார். எஸ்ஆர்எம் கல்விக்குழும நிறுவனர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.
 முதல்வர் இரா.வாசுதேவராஜ் முன்னிலை வகித்தார். இணை இயக்குநர் கே.சுப்புராம் வாழ்த்துரை வழங்கினார்.
 சென்னைபல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ள 82க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட 519 பேர் பட்டம் பெற்றனர்.
 இதில் முதுநிலை கணினி தொழில்நுட்பத்துறை மாணவி செளபாக்யா, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com