மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் இடி மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
மதுராந்தகம், கருங்குழி, வில்வராயநல்லூர், பவுஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் பகல் சுமார் 1 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.