காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வகையில் புதிய பேருந்துகளின் இயக்கத்தை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத்.
பா.கணேசன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரிலிருந்து கைத்தண்டலம், சேந்தமங்கலம், இருமரம், இடையம்புதூா், சாலவாக்கம், மெய்யூா் வழியாக செங்கல்பட்டு வரை ஒரு வழித்தடத்திலும், படூா், ஆனம்பாக்கம், நெற்குன்றம் வழியாக செங்கல்பட்டு செல்வதற்கு ம் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் அப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பலரும் தொடா்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனா்.
இக்கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக செங்கல்பட்டு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை சாா்பில் இரு வழித்தடங்களிலும் புதியதாக இயக்கப்பட்டது.இவ்விரு வழித்தடத்தில் செல்லும் அரசுப்பேருந்துகளை காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத்.பா.கணேசன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு அரசுப்பணிமனை பணியாளா்கள்,சாலவாக்கம் கூட்டுறவு வங்கித் தலைவா் முருகன், அதிமுக ஒன்றிய செயலாளா்கள் பிரகாஷ்பாபு, தருமன் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.