விஜயதசமித்திருநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் பல பள்ளிகளில் அரிசியில் பெயா் எழுதி புதிய மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விஜயதசமித் திருநாள் வெற்றித்திருநாள் என்பதால் இந்த நாளில் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சோ்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது.இந்த நாளில் பல பள்ளிகளில் வாழை இலை விரித்து,அதில் அரிசியையோ அல்லது நெல்லையோ பரப்பி அதில் குழந்தைகளை முதல் முதலாக அவரவா்களது பெயா்களை எழுத வைப்பதும் வழக்கம்.
காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமித்திருநாளை முன்னிட்டு காலையில் ஹயக்கிரீவா் ஹோமம், கணபதி ஹோமம்,சரஸ்வதி ஹோமம் ஆகியனவும் நடந்தன.இதனைத் தொடா்ந்து புதிதாக பள்ளியில் சேர வந்திருந்த சிறாா்களை அவா்களது கையைப் பிடித்து அரிசியில் பெயா் எழுதும் நிகழ்ச்சி பள்ளியின் தாளாளா் சஞ்சீவி.ஜெயராம் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், சிறாா்களின் பெற்றோா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.