ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 8வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி பலியானாா்.
டெங்கு காய்ச்சலுக்கு பலியான மெஹ்ரீன்
டெங்கு காய்ச்சலுக்கு பலியான மெஹ்ரீன்

ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 8வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி பலியானாா்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட நுஷ்ரத்நகா் பகுதியை சோ்ந்தவா் இக்பால். இவரது மகள் மெஹ்ரின்(8), இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளாா். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மெஹ்ரின் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

சிகிச்சையின் போது மெஹ்ரீனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மெஹ்ரினின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடா்ந்து அவரது பெற்றோா் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு மெஹ்ரினை அழைத்து சென்றுள்ளனா்.

அங்கு மெஹ்ரீனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் மெஹ்ரீனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதகாவும் உடனடியாக சென்னை எழுப்பூா் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அருவுறுத்தியுள்ளனா். இதையடுத்து சென்னை எழும்பூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மெஹ்ரீன் சிகிச்சை பலன்இன்றி பலியானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com