காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த இளைஞரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (32). இவர், காஞ்சிபுரம் வணிகர் வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், தனது நண்பர் விக்னேஷுடன் செவ்வாய்க்கிழமை, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கருணாகரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தலைமறைவாகினர். இந்தத் தாக்குதலில் விக்னேஷ் காயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவ இடத்தை காஞ்சிபுரம் டிஎஸ்பி கலைச்செல்வன் பார்வையிட்டார். இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.