செங்கல்பட்டு நத்தம் பகுதியில் உள்ள மதுரை வீரன் கோயில் திங்கள்கிழமை சரஸ்வதி பூஜை நடைபெற்றது.
தசரா விழா நாள்களில் நாள்தோறும் துர்கையம்மன், கருமாரியம்மன், காமாட்சி, மீனாட்சி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்களில் அம்மன் காட்சியளித்தார். தொடர்ந்து தினமும் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.