வாகனம் மோதி பள்ளி மாணவர் பலி

கூடுவாஞ்சேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

கூடுவாஞ்சேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம், கே.கே.நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஷியாம் கணேஷ் (15). இவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர் தைலாவரத்தைச் சேர்ந்த மனோஜுடன் (15), செவ்வாய்க்கிழமை காலை தைலாவரம் ஜங்ஷனில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். 
அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே ஷியாம் கணேஷ் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மனோஜ் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிர் சேர்க்கப்பட்டார். 
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com