வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு

வண்டலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 


வண்டலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
மண்ணிவாக்கம் கிருஷ்ணா நகர் சாய் அவின்யூவைச் சேர்ந்தவர் அன்பரசன் (35), பொறியாளர். இவர், கடந்த 5-ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு வேலூர் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கத்துக்குச் சென்றார். திங்கள்கிழமை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அன்பரசன் வந்து பார்த்தபோது, உள்ளே இருந்த 27 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com