மாமண்டூர் சமூக செயல்பாட்டு இயக்கத்தின் சார்பில் பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த போராளிகளின் 25-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.
சாம் நிறுவன இயக்குநர் பீ.பி. மார்ட்டின் தலைமை வகித்தார். ஜி.கருணாகரன் வரவேற்றார். என்.குளோரி, வி.இந்திரா, ஏ.அன்புமணி, வி.ஆண்டாள், கோ.செல்வராஜ், டி.மகாலிங்கம், லூர்துதாஸ், ஜே.கீதா, ஜி.காஞ்சனாதேவி, வி.சத்தியா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அப்துல்காதர், மதிமுக பொதுச் செயலர் மல்லை சத்யா, அருட்தந்தை மாற்கு, வி.தீபன் சக்கரவர்த்தி, பா.பாரதிஅண்ணா, தாமு.செல்லப்பன் உள்ளிட்ட பலர் நினைவேந்தல் உரையாற்றினர்.