காஞ்சிபுரம் அருகேயுள்ள மேலபுளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்னை நங்கநல்லூர் இன்னர்வீல் சங்கம் சார்பில் கல்வி உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் தி.பரமேசுவரியிடம் பள்ளி நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தளவாடப் பொருள்கள், கல்வி உபகரணங்களை இன்னர்வீல் சங்கத் தலைவி நீலாம்பிகை சேகரன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவி நளினி ஒளிவண்ணன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் ப.பாரதிபலராமன், முன்னாள் செயலர் ஜி.ஜமுனாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் சுபா ரவிசங்கர் வரவேற்றார். தலைமை ஆசிரியை தி.பரமேசுவரி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.