கல்லூரியில் மனநல தின விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் கிருஷ்ணா கலை-அறிவியல் கல்லூரியில் மனநல தின விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் கிருஷ்ணா கலை-அறிவியல் கல்லூரியில் மனநல தின விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை வகித்தார். தாளாளர் அ.அரங்கநாதன், ஸ்ரீகிருஷ்ணா கலை-அறிவியல் கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் ஆர்.மனோகரன், செயலர் எம்.செந்தில்குமார், பொருளாளர் வி.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வி.ஆனந்தன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கு.வெங்கடேசன் அறிமுகவுரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட மனநலத்திட்ட அலுவலர் ஆர்.சதீஷ்குமார், மனவளத்திட்ட அலுவலர் அசோக்குமார், உடல் நலக்கல்வியாளர் ஒய்.பாபு சுதந்திரநாத் ஆகியோர் மனநலம் மற்றும் காசநோயின் அறிகுறிகள் குறித்து விளக்கவுரையாற்றினர். அலுவலர் பா.புண்ணியகோடி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் மா.பிரகாஷ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com