உத்தரமேரூர் அருகேயுள்ள வயலக்காவூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உத்தரமேரூர் வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார். வருவாய் ஆய்வாளர் கிரிஜா முன்னிலை வகித்தார்.
கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.