கன்யா மாத விரத பூர்த்தியை முன்னிட்டு மாகாண்யம் ஸ்ரீகல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு 7 ஆயிரம் லட்டுகள் படைக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகாண்யம் கிராமத்தில் ஸ்ரீகல்யாண சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், கன்யா மாத விரத பூர்த்தி வைபவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பெருமாளுக்கு 7ஆயிரம் லட்டுகள் படைக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
மாகாண்யம் ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமியின் சீடர் பம்மல் பாலாஜி தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீகல்யாண சீனிவாசப் பெருமாளை வழிபட்டனர்.
இதையடுத்து சனிக்கிழமை (அக். 12) புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு அன்னக்கூட உற்சவம், அகண்ட தீப வழிபாடு மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறவுள்ளது.