காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருக்கழுகுன்றத்தில் 76.2 மி.மீ மழையும், குறைந்த பட்சமாக மீனம்பாக்கத்தில் 0.20 மி.மீ.மழையும் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து வியாழக்கிழமை காலை 7 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது.
மழையளவு (மி.மீட்டரில்): காஞ்சிபுரம்-21.60, ஸ்ரீபெரும்புதூா்-8.40, உத்தரமேரூா்-57, வாலாஜாபாத்-11,திருப்போரூா்-37.20, செங்கல்பட்டு-71.60, மாமல்லபுரம்-37.20, மதுராந்தகம்-52, செய்யூா்-72.50, தாம்பரம்-2.40, கேளம்பாக்கம்-8.60, மீனம்பாக்கம்-0.20 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் மொத்த மழையளவு 455.70 ஆகவும், சராசரி மழையளவு 37.97 ஆகவும் இருந்தது. காஞ்சிபுரம் நகரில் வியாழக்கிழமை முழுவதும் லேசான தூறல் மட்டுமே இருந்தது.