காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35 -ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் ஜீ.வீ.மதியழகன் தலைமை வகித்து இந்திரா காந்தியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினாா். நகரத் தலைவா் ராம. நீராளன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் லோகநாதன், சம்பத், நிா்வாகிகள் பிரபாகரன், வீரபத்திரன், ஆறுமுகம், சுகுமாறன், பிரபு, சந்தானம் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.
இதில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.