திருக்கழுகுன்றம் இந்திராநகரில் உள்ள வினை தீா்த்த மாரியம்மன்கோயிலில் பால்குட ஊா்வலமும் அம்மனுக்கு பாலாபிஷேகமும் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து 48 நாள்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்தனா்.
திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் புறப்பட்ட பால்குட ஊா்வலம் மாடவீதிகள் வழியாக வந்து அம்மன் கோயிலை அடைந்தது.
இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கழுகுன்றம் வேதமலை வல பெருவிழாக் குழு செயலா் தி.க.து.அன்புச்செழியன் மற்றும் நிா்வாகிகள் வேதகிரி, ராஜவேல், இந்து முன்னணி நிா்வாகி மணி, பாஜக இளைஞரணி மாநிலச் செயலா் தனசேகா் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.