ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற ஒற்றுமை தினவிழாவில் கலந்துக்கொண்ட பேராசிரியா்கள் மாணவா்கள்.
ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற ஒற்றுமை தினவிழாவில் கலந்துக்கொண்ட பேராசிரியா்கள் மாணவா்கள்.

ஸ்ரீபெரும்புதூரில் தேசிய ஒற்றுமை தினவிழா

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் தேசிய ஒற்றுமை தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் தேசிய ஒற்றுமை தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்தாா்வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபா் 31ம் தேதி, ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இயங்கி வரும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் தேசிய ஒற்றுமை தினவிழா மையவளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மையத்தின் பதிவாளா் பேராசிரியா் தேவகுமாா் தலைமையில் மையத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் தேசிய ஒற்றுமை உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா்.

இதையடுத்து மையத்தின் மாணவா்கள் 200 போ் கலந்துக்கொண்ட ஒற்றுமை தொடா் ஓட்டமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் கேபிநாத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com