செப்.11-இல் மகாகாளி கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப் பாக்கம் ஜெகதீஸ்வரி மாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாகாளி கோயிலில் வரும் 11- ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 27 அடி உயர மகாகாளி அம்மன் சிலை. 
அம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 27 அடி உயர மகாகாளி அம்மன் சிலை. 


காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப் பாக்கம் ஜெகதீஸ்வரி மாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாகாளி கோயிலில் வரும் 11- ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
சிறுகாவேரிப் பாக்கம் ஜெ.ஜெ.நகரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 27 அடி  உயரத்தில் மகா காளியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் வரும் 9 -ஆம் தேதி தொடங்குகின்றன. 
தொடர்ந்து, 11-ஆம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகளும், அன்னதானமும், இரவு உற்சவர் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.  விழாவிற்கான ஏற்பாடுகளை ஜி.ஜெயதேவ் சுவாமிகள் தலைமையிலான விழாக்குழுவினர் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகர் பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com