காஞ்சிபுரம் கத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கத்ரி கல்விச் சங்கத் தலைவர் வி.சுன்னுசா தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் ஏ.வி.என்.குமார் முன்னிலை வகித்தார். சங்கச் செயலாளர் டி.கே.நாகூசா வரவேற்றார்.
வழக்குரைஞர் ஏ.கே.ரமேஷ், கத்ரி சமாஜ் தலைவர் டி.வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆசிரியர் தின விழாவின் முக்கியத்துவம், வ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்று குறித்துப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை என்.ஜெயசுதா நன்றி கூறினார்.